முப்படை தலைமை தளபதியாகும் நரவானே| Dinamalar

நம் நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக, ஓய்வுபெறும் ராணுவ தலைமை தளபதி நரவானே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பரில், தமிழகத்தின் குன்னுாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார். அப்போது, முப்படைத் தளபதிகளின் குழுத் தலைவராக, ராணுவ தலைமை தளபதி, மனோஜ் முகுந்த் நரவானே பொறுப்பேற்றார்.

அவரின் பதவிக்காலம், நாளை மறுநாளுடன் முடிவுக்கு வர உள்ளது.இதையடுத்து, புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை, சமீபத்தில் மத்திய அரசு நியமித்தது.

latest tamil news

இந்நிலையில், ஓய்வுபெறும் நரவானேவை, அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பிரதமர் அலுவலகம் விரைவில் வெளியிட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

– புதுடில்லி நிருபர் –

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.