விஜய் முதன்முதலில் வாங்கிய சம்பளம்… எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்..!

தமிழ் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். பூவே உனக்காக என்ற படத்தின் மூலம் முதல் வெற்றியை ருசித்த
விஜய்
தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றார்.

காதல் நாயகனாக வலம் வந்த விஜய்யை திருமலை படத்தின் மூலம் ஆக்க்ஷன் ஹீரோவாக மாற்றினார் இயக்குனர் ரமணா. இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் விஜய்யின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக பல படங்கள் அமைந்துள்ளது.

விஜய்யுடன் மோதவுள்ள முன்னணி நடிகர் ? தளபதி 67 அப்டேட்..!

கில்லி,
போக்கிரி
, துப்பாக்கி, கத்தி, தெறி என விஜய்யின் படங்கள் வசூலில் புது புது சாதனை படைத்துவருகின்றது. கடந்தகாண்டு கொரோனா சூழலிலும் வெளியான
மாஸ்டர்
திரைப்படம் வசூலில் அடித்து நொறுக்கியது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்

இந்நிலையில் படங்களின் வசூல் அதிகரிப்பதை போல படத்திற்கு படம் விஜய்யின் சம்பளமும் அதிகரிப்பதாக தகவல்கள் வருகின்றன. தமிழ் நடிகர்களில் அதிகமாக சம்பளம் வாங்குபவர்களில் ஒருவராக திகழும் விஜய் முதன் முதலில் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நாளைய தீர்ப்பு என்ற படத்தில் நாயகராக அறிமுகமான விஜய் அதற்கு முன்பு தன் தந்தை
எஸ்.ஏ சந்திரசேகர்
இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய்க்கு முதன் முதலில் 500 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இதுவே அவர் வாங்கிய முதல் சம்பளம் என அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பட வசனத்தை மேடையில் பேசிய ஜீவா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.