இதேபோல ஒரு பிறந்தநாளில் அஜித் எடுத்த முக்கிய முடிவு… வைரல் ஆக்கும் ரசிகர்கள்!

Ajith 11 year old statement about fans club goes viral: நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் மே 1 தேதி கொண்டாடப்படும் நிலையில், அவர் தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்த அறிக்கை 11 ஆண்டுகளுக்குப் பிறகு வைரலாகி வருகிறது.

தமிழின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் தனது 51 ஆவது பிறந்த நாளை மே 1 ஆம் தேதி கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க தயாராகி வரும் நிலையில், அவரது 40 வது பிறந்தநாளில் அவர் கூறிய பழைய அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த அறிக்கை அஜித்தின் பல ரசிகர்களின் வாழ்க்கையை மாற்றியது, ஏனெனில் அவர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைக்கும் அதிர்ச்சியான முடிவை எடுத்தார். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி இந்த அறிக்கை வெளியிடப்பட்டது, அந்த நேரத்தில் சமூக ஊடகங்கள் இன்று போல் இல்லை என்பதால் அதன் தாக்கம் குறைவாக இருந்தது. இருப்பினும், அவரது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது அசல் அறிக்கையின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. ஏனெனில் ரசிகர்கள் தங்கள் தல 11 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கடினமான முடிவை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: ஆளுனர் கையால் விருது… சிறந்த முன்மாதிரி நடிகையான பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்

அந்த அறிக்கையில், ஒரு உச்ச நடிகராக தனது தற்போதைய நிலையை அடைய உதவியதற்காக தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அஜித் தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார். தனது ரசிகர்களை தனிப்பட்ட நலனுக்காக அவர் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்று கூறிய அஜித், மே 1 முதல், தனது ரசிகர் மன்றங்கள் கலைக்கப்படும் என்று கூறினார்.

ஒரு ரசிகனுடனான ஒரு நடிகரின் உறவு, திரைப்படத்தின் மீதான பரஸ்பர அன்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், வேறு எந்தக் கருத்தும் பரஸ்பர மதிப்பைக் குறைக்கும் என்றும் அஜித் கூறினார்.  அவரது முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது, ஆனால் பல ஆண்டுகளாக, அவரது ரசிகர்கள் அதை ஏற்றுக்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.