ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் குறித்து பசில் வெளிப்படுத்தியுள்ள விடயம்



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இன்று பெரும்பாலான ஊடகங்கள் எமது அரசாங்கத்திற்கு எதிராகவே செய்திகளை வெளியிடுகின்றன. இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்று தெரியவில்லை.

ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை போல் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை.

ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு பிரதமரோ அல்லது பிரதமரைப் பதவி விலகுமாறு ஜனாதிபதியோ கோரவில்லை.

எனவே, ஊடகங்கள் உண்மைத்தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்டவும் முடியாது என தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.