பாலியல் குற்றங்களின் பின்னணியை சொல்லும் மெய்ப்பட

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரித்துள்ள படம் மெய்ப்பட. இதில் ஆதவ் பாலாஜி, மதுநிக்கா, ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர் உள்பட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் தமிழ் செல்வம் வில்லனாக நடிக்கிறார். வேலன் இயக்கி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பரணி இசை அமைத்துள்ளார், ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பம், குறிப்பாக செல்போனால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை அதிகரித்துள்ளது. இது நகர்புறத்தில் மட்டுமல்ல கிராமபுரத்திலும் பரவி உள்ளது. அதனை படம்பிடித்து காட்டும் படமாக இது ஒருவாகி இருக்கிறது. ஒரு சிறிய தவறு எப்படி பெரும் பகையாக மாறுகிறது என்பதையும் படம் சொல்கிறது. என்கிறார், இயக்குனர் வேலன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.