நியூசிலாந்தில் ஒமைக்ரோனின் டீயு – 4 வகை கொரோனா பாதிப்பு

நியூசிலாந்தில் ஒமைக்ரோனின் AB-4 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலக நாடுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை ஒன்பது இலட்சத்து 33 ஆயிரத்து 464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டிலிருந்து, நியூசிலாந்திற்கு வந்த நபருக்கே இந்த ஒமைக்ரோன் உருமாறிய வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.கடந்த ஏப்ரலில் வெளிநாட்டில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பிய இரண்டு பேரிடம் பிஏ.2.12.1 மற்றும் பிஏ 2.12.2 ஆகிய ஒமைக்ரோனின் இரு வகைகள் உறுதியாகி இருந்தன என்று அப்போது அமைச்சகம் தெரிவித்தது.

கொரோனாவுக்கு கடந்த 2 நாட்களில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், ஒமைக்ரோனின் 3 ஆவது வகை உருமாறிய தொற்று அந்நாட்டில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் ஒன்று கூடுவதற்கு பெரிய கட்டுப்பாடுகள் இல்லாத சூழலில், அதிதீவிர பரவல் தன்மை கொண்ட ஒமைக்ரோனின் புதுப்புது வகைகள் அடுத்தடுத்து நியூசிலாந்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.