வளைகாப்பு முடிந்து தாய் வீட்டிற்கு வந்த நிறைமாத கர்ப்பிணி.. நேர்ந்த சோகம்!


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் நள்ளிரவில், மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி பெண் உட்பட 2 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த தம்பதி முத்துராமன்-காளியம்மாள். இவர்களது ஒரே மகளான கார்த்திகா 9 மாத கர்ப்பிணியாக இருந்ததால், கடந்த வெள்ளிக்கிழமை வளைகாப்பு நடத்தப்பட்டு தாய் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் உறங்கிக் கொண்டிருந்த கார்த்திகா மற்றும் அவரது பெற்றோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

பலத்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த மீட்பு படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். ஆனால் கார்த்திகாவும் அவரது தாய் காளியம்மாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட முத்துராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக தென்பாகம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 25 ஆண்டுகள் பழமையான வீடு என்பதால் ஏற்கனவே சிதிலமடைந்து இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.