பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (04) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன் போது ,நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பில்  சபைக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

நிதி அமைச்சர் இதுதொடர்பில் விளக்கமளிப்பார். பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை
வரை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோப் குழு அறிக்கைள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதமும் இடம்பெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.