அப்பாடா… ஒரு வழியாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்சே முடிவு?

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு பிரதமர்
மகிந்த ராஜபக்சே
பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இலங்கை மக்களும், தொழிற்சங்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. மறுபுறம் பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்து வருகின்றன.

இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் சிறப்பு கேபினட் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பேசும்போது தான் பதவி விலகுவது மட்டும்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்றால் அதை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் பிரதமர் பதவியை ஏற்க பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலலேகயா தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளாராம்.

இரண்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசிய போது சஜித் பிரேமதாசா சில நிபந்தனைகளை விடுத்ததாகவும், அதை அதிபர் கோத்தபய ஏற்று கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்சே நாளை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தமது பதவியை ராஜினாமா செய்ய முடிவடுத்துள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்களும் தகவல் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.