லண்டனில் உள்ள பென்னிகுவிக் நினைவிடத்தில் தமிழக அமைச்சர் மரியாதை

லண்டன்:
தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் லண்டனில் நடந்த தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளிகள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
பின்னர் லண்டன் கேம்பர்லி நகரில் உள்ள முல்லை பெரியார் அணையினை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் கல்லறைக்கு சென்ற அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
எல்காட் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ், லண்டன் திமுக அயலக அணி அமைப்பாளர் பைசல், சந்தனபீர் ஒலி உள்பட பலர் உடன் இருந்தனர்.
பின்னர் லண்டன் ரெக்ரியேஷன் பார்க்கில் தமிழக அரசு சார்பாக கர்னல் ஜான் பென்னி குவிக் சிலை நிறுவப்பட உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டார். ஜான் பென்னி குவிக் சிலை வைப்பது தொடர்பாகவும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்து கொண்டார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.