மதுரை: மத்திய சிறையில் விசாரணை கைதிகளுக்கிடையே மோதல்: போலீசார் விசாரணை

மதுரை மத்திய சிறையில் கஞ்சா கேட்டு விசாரணை கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக உள்ள சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த தினேஷ், நிதிஷ்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த சையது இப்ராஹிமிடம் கஞ்சா கேட்டுள்ளனர். அப்போது பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் இரு பிரிவினரும் மோதிக் கொண்டதில் கைதிகள் சையது இப்ராஹிம் மற்றும் தினேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த சிறைக்கைதிகள் சிறைத்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
image
இந்த தாக்குதல் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள், மற்றும் கரிமேடு காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் சிறைக்குச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் பிரச்னை ஏற்பாடாத வகையில் கைதிகளுக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கி வருகின்றனர். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.