டெல்லி தீ விபத்துத் தொடர்பாக 2 பேர் கைது.!

டெல்லியில் தீப்பிடித்த கட்டடத்தில் செயல்பட்டு வந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரைக் கைதுசெய்துள்ள காவல்துறையினர், கட்டடத்தின் உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.

டெல்லி முண்டகா மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே உள்ள 4 மாடிக் கட்டடத்தில் நேற்று மாலை நேர்ந்த பெரும் தீவிபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நாற்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் 29 பேரைக் காணவில்லை. கட்டடத்தின் முதல் தளத்தில் பற்றிய தீ மேலுள்ள 2 தளங்களுக்கும் பரவியது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

தீத்தடுப்புப் பாதுகாப்புக்கான ஒப்புதல் பெறாத அந்தக் கட்டடத்தில் அலுவலகத்தை நடத்திய கண்காணிப்புக் கேமரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஹரீஷ் கோயல், வருண் கோயல் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கட்டடத்தின் உரிமையாளரான மணீஷ் லக்ரா என்பவரைத் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.