12-ம் வகுப்பு மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான் பட்டியில் 12-ம் வகுப்பு மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூங்குடி கிராமத்தை சேர்ந்த குணாளன் என்ற மாணவன் கடந்த 13 -ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், உடன் சென்ற மற்றொரு இளைஞன் மீது சந்தேகம் இருப்பதாக கூறி திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெற்றது.

தகவல் அறிந்து சென்ற குளத்தூர் வட்டாட்சியர் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.