குலோப்ஜாமூன் விலையை குறைத்துக் கொடுக்காத ஆத்திரத்தில் இனிப்பக உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது.!

சென்னையில் குலோப்ஜாமூன் விலையை குறைத்துக் கொடுக்காத ஆத்திரத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த இனிப்பக உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடிப்பாக்கத்தில் லோகேஷ் கான் என்ற வடமாநில இளைஞர் இனிப்பு விற்பனைக் கடை நடத்தி வருகிறார். திங்கட்கிழமை இரவு இவரது கடைக்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவரான பாலாஜி என்பவர், குலோப்ஜாமூன் விலை கேட்டுள்ளார்.

கிலோ 100 ரூபாய் என்றதும் உள்ளூர்க்காரனிடமே விலை அதிகமாகச் சொல்கிறாயா என வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தனது நண்பன் மதன் என்பவனை அழைத்து வந்து, லோகேஷ்கானை தாக்கியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பாலாஜியை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாகவுள்ள மதனைத் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.