உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்.. ரஷ்யா அறிவிப்பு

மரியுபோல் உருக்காலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் இதுவரை சரணடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை உருக்காலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடத்தை ரஷ்யா திறந்தது. அங்கிருந்து வெளியேறும் வீரர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் உள்ள நோவோ-அசோவ்ஸ்க் (Novoazovsk) நகரில் வெளி உலகத் தொடர்பின்றி தங்கவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ள 80 வீரர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.