சென்னையில் பட்டப்பகலில் பைனான்சியர் வெட்டிக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்.!

சென்னை அமைந்தகரை செனாய் நகரில், பைனான்சியர் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கள்ளகுறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சேத்துப்பட்டைச் சேர்ந்த பைனான்சியர் ஆறுமுகம் நேற்று ஷெனாய் நகர் ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

இதனையடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் சந்திரசேகர், ரோஹித் ராஜ் ஆகிய இருவர் சரணடைந்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.