சென்னையில் பள்ளி மாணவிகளை கிண்டலடித்ததாக கூறி 10-ம் வகுப்பு மாணவனை தாக்கிய சக மாணவர்கள்.!

சென்னை அடுத்த ஆவடியில், பள்ளி மாணவிகளை கிண்டலடித்ததாக கூறி பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், சக மாணவர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோணம்பேடு அரசு பள்ளி மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதுவதற்காக ஆவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்துள்ளனர். அந்த மாணவிகளை ஆவடி அரசு பள்ளி மாணவர் ஒருவர் கிண்டலடித்ததாக கூறப்படுகிறது.

தேர்வு முடித்து வெளியே வந்த அந்த மாணவரை சக மாணவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சரமாரியாகத் தாக்கினர். மயக்கமடைந்த அந்த மாணவன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான்.

போலீஸ் விசாரணையில், மாணவர்கள் குழுவாக செல்லும் போது யாரோ ஒருவர் கிண்டலடித்ததற்கு தவறுதலாகத் தன்னைத் தாக்கி விட்டதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.