திருவாரூரில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், பழங்கால சிலைகள் கண்டெடுப்பு.!

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முத்து என்பவர் தமது நிலத்தில் வீடு கட்டுவதற்காக ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுமார் 3 அடி ஆழத்தில் 2 அடி உயரமுள்ள பெருமாள் சிலை, 3 அடி உயரமுள்ள பாவை சிலை உள்ளிட்ட 9 சிலைகளும் உலோக கலையம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.

சிலைகள் அனைத்தும் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆய்வுக்கு பின்னரே சிலைகளின் மதிப்பு என்னவென்பது தெரிய வருமென வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.