தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனம் போட்ட முதலமைச்சர்.. ஸ்டெப்பு வேர லெவல்..

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குன்னூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுகவினர் அளித்த வரவேற்புக்கு பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த பத்து ஆண்டுகளில் செய்யாத நலத்திட்டங்களை ஒரே ஆண்டில் செய்துள்ளதாக கூறினார்.

பின்னர் உதகை சென்ற முதலமைச்சரை வரவேற்று தோடர் பழங்குடியின மக்கள் நடனமாடினர். அவர்களுடன் இணைந்து முதலமைச்சரும் நடனமாடினார்.

ஊட்டியில் நடைபெறும் மலர்க்கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர், மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.