நெல்லை கல்குவாரி விபத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் குவாரி உரிமையாளரின் வீடு, அவரது மகன் வீடுகளில் போலீசார் சோதனை.!

நெல்லை கல்குவாரி விபத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் கல்குவாரி உரிமையாளர் செல்வராஜின் வீடு, அவரது மகன் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

அடைமிதிப்பான்குளம் குவாரி இடிபாடுகளில் சிக்கிய 6ஆவது நபரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கல்குவாரியில் உள்ள செல்வராஜின் அலுவலக பூட்டை உடைத்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

செல்வராஜின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்தும் வரும் போலீசார், அவரது வங்கிக் கணக்கில் உள்ள ஒரு கோடி ரூபாயை முடக்கினர். இதனிடையே, திசையன்விளையில் உள்ள செல்வராஜின் வீடு, கடைகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.