பரட்டை தலையில் பட்டி டிங்கரிங்… போலீசுக்கு பயந்து ஓடிய பட்டாக்கத்தி ரவுடி கைது..!

சென்னையில் பட்டாக்கத்தியை கொண்டு கேக் வெட்டிய பரட்டைத் தலை ரவுடி ஒருவர், போலீசுக்கு பயந்து தலைமுடியை வெட்டிக் கொண்டு பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை வைத்து சென்னை காவல்துறை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் வீடியோவை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் பரட்டை தலையுடன், பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய திருமங்கலத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி ஹானஸ்ட்ராஜ் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

போலீசார் தேடுவது தெரிந்ததும், போலீஸ் பிடித்துவிடும் என்ற அச்சத்தில் பரட்டையாக இருந்த தலைமுடியை பட்டி டிங்கரிங் பார்த்து வெட்டிவிட்டு தலைமறைவாக அவரது வீடு இருந்துள்ளார்.

அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்த போலீசார் கெட்டப்பை மாற்றி சுற்றிய பரட்டை ஹானஸ்ட்ராஜை அடையாளம் கண்டு கைது செய்தனர். கெத்து என்ற நினைப்பில் பயங்கர ஆயுதங்களால் கேக் வெட்டினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.