பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – இந்தோனேசிய அதிபர்

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை வருகிற 23 ஆம் தேதி முதல் விலக்குவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதியை இந்தோனேசியா நிறுத்தியதால், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது.

உலக அளவில் பாமாயில் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள இந்தோனேசிய அரசின், இந்த முடிவைக் கண்டித்து விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பில் உள்ளதால், ஏற்றுமதிக்கு விதித்த தடையை விலக்க பரிசீலிக்க வேண்டும் வேண்டும் என்று அரசுக்கு எம்பிக்களும் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது தடை விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.