ரஷ்யாவுடன் போராட உக்ரைனுக்கு அமெரிக்கா 4,000 கோடி டாலர் நிதியுதவி| Dinamalar

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு 4,000 கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் போர் துவங்கிய நாள் முதலாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை வழங்கி வருகி்ன்றன.

latest tamil news

இதன் ஒரு பகுதியாக உக்ரைன் நாட்டின் படை வலிமையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டிற்கு 4,000 கோடி டாலர் நிதியுதவி வழங்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.