#BigBreaking || இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 8,6 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு.!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும்  குறைத்து மத்திய அரசு அறிவிப்பு.

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம். இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 9 கோடி பயனாளிகளுக்கு ஒரு காஸ் சிலிண்டருக்கு (12 சிலிண்டர்கள் வரை) 200 ரூபாய் மானியம் வழங்குவோம்.

நமது இறக்குமதி சார்ந்து அதிகமாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீதான சுங்க வரியையும் குறைக்கிறோம். சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும். சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்

சிமென்ட் கிடைப்பதை மேம்படுத்தவும், சிறந்த தளவாடங்கள் மூலம் சிமென்ட் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.