கடந்த 3 ஆண்டுகளில் 9600 தீவிரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்துள்ளனர் – அமித்ஷா!

அரசின் முயற்சியால் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதச் செயல்கள் 89 விழுக்காடு குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் நாம்சாய் மாவட்டத்தில் அமித் ஷா, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணி முடிந்த திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பேசிய அமித் ஷா, கடந்த மூன்றாண்டுகளில் 9600 தீவிரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்து பொதுவாழ்க்கையில் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். 

அருணாசலப் பிரதேசத்தின் தொலைவு பகுதிகளை ரயில்பாதை மூலம் இணைப்பை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.