சட்டவிரோதமாக டி.ஜே.நிகழ்ச்சி &மது, போதை விருந்து.! திடீரென மயங்கி, உயிரிழந்த இளைஞர்.! 

சென்னையில் உள்ள வி.ஆர்.மாலில் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இசைநிகழ்ச்சி மற்றும் மது உள்ளிட்டவை அடங்கிய பார்ட்டி கொண்டாடப்பட்டுள்ளது. இதில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்யை மார்க், விக்னேஷ் மற்றும் பாரத் உள்ளிட்டோர் நடத்தியுள்ளனர். இதில் 800-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மென்பொருள் நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். 

மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் அதிக அளவு மது மற்றும் போதை மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்து இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரவீன் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.