திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைப்பாதையில் 6 அடி நீள நாகப் பாம்பு.. லாவகமாக பிடித்த தேவஸ்தான வன ஊழியர்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் 6 அடி நீளமுள்ள நாக பாம்பினை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அலிபிரி அடிவாரத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலின் பெயரில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.

நேற்று மாலையில் இந்த நடைபாதை பகுதியில் சுமார் 6 அடி நீளம் உள்ள நாகம் ஒன்றை கண்ட பக்தர்கள், அங்கிருந்து அலறி அடித்து ஓடினர்.

இதுபற்றி தகவல் அறிந்த தேவஸ்தான வன ஊழிய விரைந்து வந்து லாவகமாக அந்த பாம்பை பிடித்து எடுத்துச் சென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.