அதிமுக எம் எல் ஏ வாகனத்துக்கு வழி விட்டவர் மின்சாரம் தாக்கி மரணம்

த்தங்கரை

ஊத்தங்கரை அருகே அதிமுக எம் எல் ஏ வாகனத்து வழி விட்டவர் மின்சாரம் தாக்கி  உயிர் இழந்துள்ளார்

திமுக வை சேர்ந்த தமிழ்ச்செல்வம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேடை பகுதியில் உள்ள பெரிய தள்ளப்பாடி பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

தற்கான பூமி பூஜை இன்று நடைபெற இருந்தது.  இதில் கலந்து கொள்ள ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வம் வாகனம் மூலமாக அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.  அதே சாலையில் சென்று கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வாகனத்துக்கு வழி விடச் சாலை ஓரமாக ஒதுக்கி நின்றுள்ளார்,

அவர் தாம் விழாமல் இருக்கச் சாலையின் ஓரம் இருந்த தற்காலிக இரும்பு கம்பத்தைப் பிடித்துள்ளார்.  இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையொட்டி பூமி பூஜை நிகழ்வு நிறுத்தப்பட்டு எம்.எல்.ஏ திரும்பிச் சென்று விட்டார். அந்த பகுதியில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.