சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப பேச்சுவார்த்தை நிறைவு

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடல்களை இன்று நிறைவு செய்வதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

வீடியோ தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு உதவுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.