நரேந்திர மோடியை பாராட்டிய ஜோ பைடன் – என்ன காரணம்?

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், ஜனநாயக முறையில் இந்தியா வெற்றிகரமாக கையாண்டதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டுத் தெரிவித்து உள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் நரேந்திர
மோடி
பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மக்களுக்கு இடையிலான உறவுகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா – அமெரிக்கா கூட்டு நட்புறவு நம்பிக்கையின் அடிப்படையிலானது என்றும், இரு நாடுகள் இடையே பொதுவான நலன்கள் மற்றும் மதிப்பீடுகள் மூலம் வலுவான நிலையில் அது உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்தியா – அமெரிக்க தடுப்பூசி நடவடிக்கை திட்டத்தை புதுப்பிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஈரான் கட்டட விபத்து: 10 பேர் பலி; 80 பேரின் நிலை என்ன?

தொடர்ந்து பேசிய அதிபர் ஜோ பைடன், கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஜனநாயக முறையில் இந்தியா வெற்றிகரமாக கையாண்டு உள்ளதாகவும், இதற்காக பிரதமர் மோடியை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். கொரோனா தொற்று நோயை கையாண்ட விதத்தில் இந்தியாவை ஒப்பிடுகையில் சீனா தோல்வி அடைந்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் வெற்றி, ஜனநாயக முறை மூலம் எதையும் வழங்க முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டி உள்ளதாகவும், சீனா மற்றும் ரஷ்யா போன்ற எதேச்சதிகார முறை வேகமாக மாறிவரும் உலகை சிறப்பாக கையாள முடியும் என்ற கட்டுக்கதையை முறியடித்துள்ளது என்றும் அதிபர் பைடன் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.