பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட நபரை ஹெலிக்காப்டர் மூலம் பத்திரமாக மீட்ட மீட்புப்படையினர்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள டாலி நகரில் 500 அடி உயரமுடைய குன்றின் நடுவே பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட நபரை ஹெலிகாப்டரில் சென்று மீட்புப்படையினர் மீட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த நபர் குன்றின் நடுவே சிக்கிக்கொண்டிருந்ததை பார்த்த மீனவர் ஒருவர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற மீட்புப்படையினர் சிக்கிக்கொண்டிருந்த நபரை மீட்டு பத்திரமாக தரையிறக்கினர்.

அந்த நபர் பாறை இடுக்கில் எப்படி சிக்கினார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.