உக்ரைனின் பெரும் பணக்காரர் போரினால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்திற்காக ரஷ்யா மீது வழக்கு தொடர திட்டம்..!

உக்ரைன் நாட்டின் மரியுபோலில் 20 பில்லியன் டாலர் வரை சேதத்தை சந்தித்த உக்ரைனின் பெரும் பணக்காரரான ரினாட் அக்மெடோவ், பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக ரஷ்யா மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து உக்ரேனிய செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்ய தாக்குதலில் பேரழிவிற்குள்ளான துறைமுக நகரமான மரியுபோலில் எஃகு ஆலைகள், இல்லிச் ஸ்டீல் அண்ட் அயர்ன் ஒர்க்ஸ் உள்ளிட்டவைகள் உருக்குலைந்து பெரும் சேதத்தை சந்தித்தாகவும், மொத்த இழப்புகளின் மதிப்பு 17 பில்லியன் டாலர் முதல் 20 பில்லியன் டாலர் வரை இருக்கும் என தெரிவித்தார். ரஷ்யாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்து அனைத்து இழப்புகளுக்கான உரிய இழப்பீடு கோருவோம் என கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.