சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக புகைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்வு

உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூறும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று (31) இடம்பெற்றது.

புகைப்பொருள் பாவனை அற்ற தேசம்” எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது சாய்ந்தமருதில் இருந்து மாளிகைக்காடு வரை விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ எல் எம் றிபாஸ், பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

புகைத்தலை தடுக்கும் வகையிலான வாசகங்களை கொண்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் துணை மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் என பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம் பி ஏ வாஜித்,பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் ஐ எம் இர்ஷாத், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ எல் நியாஸ் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

Logini Sakayaraja

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.