மலேசியா தொழிற் சந்தையை அடிப்படையாக கொண்டு பயிற்சி நிலையம்

மலேசியாவில் தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு விசேட பயிற்சி நிலையம் ஒன்றை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர்  Tan Yang Thai உடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதுதொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மலேசியாவில் பயிற்சி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும், அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து பயிற்சி நிலையத்தை விரைவில் நிர்மாணிக்கும் ப‌ணிக‌ள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் மேலும் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.