வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் மூடப்படும்

மறு அறிவித்தல் வரை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்படி, 2022 மே மாதம் 30 ஆம் திகதி முதல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

அன்றைய தினங்களில் அலுவலக நேரம் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை செயற்படும்

அத்துடன், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து கடமையாற்ற வேண்டும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனவே வாடிக்கையாளர்கள் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (CAASL) அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.