இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை!!

ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை புரிந்துள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அதிகாலையில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் எதிரே கடற்கரையில் வந்து இறங்கிய இவர்களை மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து இதுவரை 83 தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.