கொரோனா தொற்றுக்கு பிறகு மோடிக்கு மக்கள் ஆதரவு 2 மடங்கு அதிகரிப்பு

புதுடெல்லி:

நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி பிரதமராக பதவி ஏற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

‘லோக்கல் சர்கிள்ஸ்’ என்ற அமைப்பு சுமார் 64 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. அதில் 67 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய போது எடுக்கப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில், தற்போது கூடுதலாக சுமார் 2 மடங்கு மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொரோனா 3-வது அலையை மத்திய அரசு திறம்பட கட்டுப்படுத்தியதாகவும், கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார சூழலை மத்திய அரசு சிறப்பாக கையாண்டதாகவும் ஆய்வின் போது பொது மக்கள் கருத்து தெரிவித்தனர்.

அதேநேரத்தில் நாட்டில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு 37 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளுடன் ஒப்பிடு கையில் இது அதிகமகும்.

கடந்த 2021-ம் ஆண்டு 27 சதவீதம் பேரும், 2020-ம் ஆண்டு 29 சதவீதம் பேரும், மத்திய அரசின் வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக பணவீக்கம் அதிகமாக இருப்பதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர். சமூல நல்லிணக்கத்தை மத்திய அரசு சீர்குலைத்து விட்டதாக 33 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காற்று மாசுபாடு உள்ளிட்டவற்றை குறைக்க மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று 44 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.