தலைமைச் செயலகம் அருகே ஒருவர் தீக்குளிப்பு

சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்  பொன்னுசாமி. இவர் சுப்பிரமணி என்பவரிடம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய சுப்பிரமணி பணத்தை திருப்பித் தரவில்லை. 
இதனால் மனமுடைந்த பொன்னுசாமி பணத்தை திருப்பி வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம்  அருகே உள்ள பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இதையடுத்து அங்கிருந்தவர்கள் பொன்னுசாமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.