காஷ்மீர் பள்ளி ஆசிரியை கொலை ராகுல் புகார்; அமித்ஷா நாளை ஆலோசனை

டெல்லி: காஷ்மீரில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒன்றிய அரசை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுனருடன் நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளார். ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்னி பாலா. பள்ளி ஆசிரியையான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த அந்த ஆசிரியை சுட்டு கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘காஷ்மீரில் பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் உயிரிழக்கின்றனர். இதுவே உண்மை, இது (காஷ்மீர் பைல்ஸ்) படம் அல்ல. காஷ்மீரில், கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர், 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது ஒரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் பண்டிட்கள் போராட்டம் நடத்துகிறார்கள், ஆனால் பாஜ, மோடி அரசு தனது 8 ஆண்டு கொண்டாட்டத்தில் மும்முரமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், காஷ்மீர் பண்டிட் கொலைகள் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹாவுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். டெல்லியில் நாளை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சக உயரதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.