புதுடில்லி: நடந்து முடிந்த ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலாக கருத்து உள்ளதாக ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 15வது ஐ.பி.எல்., தொடரின் பைனல், ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. ராஜஸ்தானை வீழ்த்தி, ஐ.பி.எல்.,லில் முதன்முறையாக களமிறங்கிய குஜராத் அணி, இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றது.
இது தொடர்பாக சுப்ரமணியசாமி வெளியிட்ட அறிக்கை: நடந்து முடிந்த ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலாக கருத்து உள்ளது. அமித்ஷாவின் மகன் பிசிசிஐ.,- யை ஆட்டுவிக்கும் சர்வாதிகாரியாக உள்ளதால், மத்திய அரசு விசாரணை செய்யாது. இவ்விவகாரத்தை தெளிவுபடுத்துவதற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுடில்லி: நடந்து முடிந்த ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலாக கருத்து உள்ளதாக ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்ரமணியசாமி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.