ஆங்கில உச்சரிப்பு போட்டியில் ரூ 38.8 லட்சம் பரிசு வென்ற இந்திய வம்சாவளி மாணவி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி இந்திய மதிப்பில் ரூ 38 லட்சம் பரிசு வென்றார்.

latest tamil news

அமெரிக்காவில் ‛ஸ்பெல் பி’ என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் ஆங்கில உச்சரிப்பு போட்டி நடத்துகிறது. இந்த வருடம்,2022ல், நடந்த போட்டியில் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி, ஹரிணி லோகன், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் ‛ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பி’ என்ற பட்டத்தையும், இந்திய மதிப்பில் ரூ 38.8 லட்சம் பரிசையும் பெற்றார்.

latest tamil news

சுவாரஸ்யமாக நடந்த இறுதிப் போட்டியில் ஹரிணி லோகன் 21 வார்த்தைகளை சரியாக உச்சரித்து முதல் பரிசை தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தை பிடித்த இந்திய வம்சவளி மாணவர் விக்ரம் ராஜூ 15 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.