ஆம்புலன்ஸில் மோசமான குழந்தையின் உடல்நிலை… சமயோசிதமாக செயல்பட்ட ஓட்டுநர்!

வேலூரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக குழந்தை பிறந்தது. சமீபத்தில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குக் குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனடியாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளார்கள்.

குழந்தைக்கு சிகிச்சை

இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையைச் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆம்புலன்ஸ் ஸ்ரீபெரும்புதூர் அருகே வரும்போது, குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர் அமுதாவிடம் குழந்தையின் உடல்நிலை குறித்துக் கூறப்பட்டது. இதனையடுத்து மருத்துவர், ஆம்புலன்ஸிலேயே குழந்தைக்குச் சிகிச்சை அளித்தனர்.

குழந்தைக்கு சிகிச்சை

குழந்தையின் உடல்நிலை சரியானதையடுத்து மீண்டும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தக்க சமயத்தில் சரியாக முடிவெடுத்து நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், உடனடியாக ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.