உத்தரகாண்ட் இடைத்தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி வெற்றி.. பிரதமர் மோடி வாழ்த்து!

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் காட்டிமா தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார்.

எனினும் முதலமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து 6 மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்று இருந்த சூழலில், இடைத்தேர்தலில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

புஷ்கர் சிங் தாமியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.