கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாற சட்டப்படி தடையில்லை: டெல்லி ஐகோர்ட்

டெல்லி: மதம் மாற சட்டப்படி தடை இல்லை என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாற சட்டப்படி தடையில்லை என டெல்லி ஐகோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார், பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகளை அளித்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் விசாரித்தனர். இதையடுத்து மனுவை பரிசீலித்த நீதிபதிகள் பெரிய அளவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதற்கான தரவுகள் எங்கே என கேட்டனர், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் வழக்கு தொடர்ந்துள்ளனரா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதையடுத்து சமூகவலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாற சட்டப்படி தடையில்லை எனவும், ஒருவர் தான் விரும்பும் எந்தவொரு மதத்தையும் பின்பற்ற அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தையும் தெரிவித்தனர்.மேலும் இந்த வழக்கு தொடர்பான விரிவான விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து எந்த வித நோட்டீஸையும் பிறப்பிக்காமல் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.