மதுரை: மண்சரிவில் சிக்கிய தொழிலாளி – பொக்லைன் மூலம் மீட்டபோது தலை துண்டிப்பு?

மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியின்போது மண் சரிந்ததில் உள்ளே தொழிலாளி ஒருவர் சிக்கிக்கொண்டார். அவரை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டபோது தலை துண்டானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை விளாங்குடியில் கழிவுநீர் குழாய் பதிக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தொழிலாளி ஒருவர் மண் குவியலுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். தொழிலாளியை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டபோது தலை துண்டானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி மீட்புப் பணி மேற்கொண்டதால் உயிரிழப்பா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீரன் என்ற சதீஷ் என்பவர் தெரியவந்துள்ளது. அவர் 2 குழந்தைகள் மற்றும் தன் மனைவியுடன் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மதுரையில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.