கொழும்பு டு மாஸ்கோ புறப்பட இருந்த விமானம் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தம்.. இறக்கி விடப்பட்ட பயணிகள்.. காரணம் என்ன.?

கொழும்பில் இருந்து மாஸ்கோவுக்குப் புறப்பட இருந்த ஏரோபுளோட் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அதிலிருந்த பயணியர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர்.

ரஷ்யாவின் ஏரோபுளோட் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்குப் பெற்று விமானங்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில் கொழும்புக்கு வந்த ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் மீண்டும் மாஸ்கோவுக்குப் புறப்படத் தயாராக இருந்த கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அதிலிருந்த பயணியர்கள் இறக்கி விடப்பட்டனர்.

உக்ரைன் போரால் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் ஏரோபுளோட்டுக்கு விமானங்களைக் குத்தகைக்கு வழங்கிய நிறுவனங்கள் ஒப்பந்தங்களை முறித்துக் கொண்டுள்ளன.

இந்நிலையில் குத்தகை நிறுவனத்துடன் உள்ள வணிகத் தகராறு காரணமாக ஏரோபிளாட் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.