துப்பாக்கி சூடு: மூவர் பலி| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்காவில், தேவாலயத்துக்கு வெளியே இரண்டு பெண்களை துப்பாக்கியால் சுட்ட நபர், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தின் ஆமெஸ் என்ற இடத்தில், ‘கார்னர்ஸ்டோன்’ தேவாலயம் உள்ளது. இதன் வாசலில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
அதன் பின், அந்த மர்ம நபர் தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்த பெண்கள் யார், அவர்கள் எதற்காக சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை. இந்த கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜோ பைடன், அமெரிக்க அதிபர்

அதிபர் வருத்தம்!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதற்கு, பார்லிமென்டில் எம்.பி.,க்களின் ஆதரவு வேண்டும். அவ்வாறு ஆதரவு கொடுக்காத எம்.பி.,க்களுக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.