தொழில் துவங்க உகந்த சூழல் உள்ளது: புதுவை முதல்வர்| Dinamalar

புதுச்சேரி: தொழில்முனைவோர் மாநாடு, அண்ணா சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டலில் நேற்று நடந்தது.

புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு, இந்தோ-பிரெஞ்சு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், பிரெஞ்சு தூதர் லிசே டால்பட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். தொழில்துறை செயலர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ‘புதுச்சேரி மாநிலத்துக்கு அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் வர வேண்டும்; நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். அதற்கு உகந்த சூழல் தற்போது உள்ளது. தொழிற்சாலைகள் தொடர்பான அனுமதியை அதிகாரிகள் விரைந்து வழங்க வேண்டும்’ என்றார். மாநாட்டில் தொழில் நிபுணர்களுடன் குழு விவாதங்கள் நடந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.