பிரதமர் மோடி பழைய இந்திய பெருமையை மீட்டு வருகிறார்; கவுதம் அதானி

லக்னோ: பிரதமர் மோடி பழைய இந்திய பெருமையை மீட்டு வருவதாக தொழிலதிபர் கவுதம் அதானி கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அதானி குழுமம் எழுபதாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் 30 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறியுள்ளது. இதுதொடர்பாக குழும தலைவர் கவுதம் அதானி இந்த ஆண்டின் உத்தரபிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசியபோது இதனைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாலை கட்டுமான மற்றும் மேம்பாட்டுக்காக மேலும் 24 ஆயிரம் கோடி ரூபாய் தங்கள் நிறுவனம் ஒதுக்கி உள்ளதாக தெரிவித்த அவர், மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் ராட்சத கன்டெய்னர்களில் பொருட்களை ஏற்றி டெலிவரி செய்யும் துறைக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக கூறியுள்ளார்.

latest tamil news

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் தெற்காசியாவின் மிகப்பெரிய ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் உருவாக்க உள்ளதாகவும் மாநிலத்திலேயே இதுதான் பெரிய ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையாக விளங்கும் என்றும் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் நாளைய இந்தியாவின் நம்பிக்கையாக விளங்குவதால் நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை அந்த மாநிலத்தில் முதலீடு செய்கிறோம் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை முன்னேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டி உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பெருமையை மீட்டெடுக்கும் முயற்சி மேற்கொண்டு வருவதாக அதானி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.