பெற்ற மகள்கள் காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரம்.. மதுபோதையில் மனைவியை அடித்து கொன்ற கணவன்!

நாகப்பட்டினம் அருகே, இரு மகள்கள் காதல் திருமணம் செய்துகொள்ள மனைவியே காரணம் என கூறி, மதுபோதையில் அவரை அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

நாகூர் அடுத்த கடம்பங்குடியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவருக்கு 4 மகள்கள் உள்ள நிலையில், இருவர் பெற்றொர் சம்மதத்துடனும், இருவர் காதல் திருமணமும் செய்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வழக்கம்போல நேற்று இரவும் மது போதையில் வந்த சிங்காரவேலு மனைவி முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இரு மகள்கள் ஓடிப்போக நீதான் காரணம் என கூறி, தினமும் மனைவியிடம் சிங்காரவேலு தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சிங்காரவேலு கட்டையால் தனது மனைவியை அடித்துக்கொலை செய்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.